🔗

புகாரி: 2862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَاسْتَعَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ، يُقَالُ لَهُ مَنْدُوبٌ، فَرَكِبَهُ وَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»


பாடம் : 50 முரட்டு வாகனப் பிராணியின் மீதும், ஆண் குதிரையின் மீதும் சவாரி செய்யலாம்.

ராஷித் பின் சஅத் (ரஹ்) அவர்கள், முன்னோர்கள், (சவாரி செய்வதற்கு) ஆண் குதிரையையே விரும்பினார்கள். ஏனெனில், அது தான் மிக வேகமாக ஓடக் கூடியதும், துணிச்சல் மிக்கதுமாகும் என்று கூறினார்கள்.

2862. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ‘மன்தூப்’ என்றழைக்கப்பட்டு வந்த குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சவாரி செய்தார்கள்.

பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து), ‘பீதி எதையும் நாம் பார்க்கவில்லை. இந்த குதிரையை(க் காண காரணம்) தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக நாம் கண்டோம்’ என்று கூறினார்கள்.
Book : 56