🔗

புகாரி: 2882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْقِي وَنُدَاوِي الجَرْحَى، وَنَرُدُّ القَتْلَى إِلَى المَدِينَةِ»


பாடம் : 67 புனிதப் போரில் காயமுற்றவர்களுக்குப் பெண்கள் மருந்திடுவது.

2882. ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார்.

(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.
Book : 56