🔗

புகாரி: 2888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَحِبْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَكَانَ يَخْدُمُنِي وَهُوَ أَكْبَرُ مِنْ أَنَسٍ» قَالَ جَرِيرٌ: «إِنِّي رَأَيْتُ الأَنْصَارَ يَصْنَعُونَ شَيْئًا، لاَ أَجِدُ أَحَدًا مِنْهُمْ إِلَّا أَكْرَمْتُهُ»


பாடம்: 71

புனிதப் போரில் பணிவிடை செய்வதின் சிறப்பு.

2888. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்கு பணிவிடை செய்து வந்தார்கள். (வேண்டாம் என நான் மறுத்த போது)  “அன்ஸாரிகள் (நபி-ஸல்-அவர்களுக்கு பணிவிடை செய்தல் என்ற) ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் அவர்களுக்கு பணிவிடைகள் செய்து அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை”. என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறினார்கள். 

அத்தியாயம்: 56