«رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا»
பாடம்: 73
இறைவழியில் ஒருநாள் எல்லை யைக் காவல் காப்பதன் சிறப்பு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; பொறுமையில் (எதிரிகளையும்) விஞ்சி விடுங்கள்; (எதிரியிடம்) விழிப்போடு இருங்கள்; அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றியாளர்களாகத் திகழலாம். (3:200)
2892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில், ஒரு சாட்டை வைக்கு மளவுக்கு இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். ஓர் அடியார் இறைவழியில் (அறப்போரில்) செல்கின்ற மாலை நேரம், அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம்: 56