🔗

புகாரி: 2968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ، فَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»


பாடம் : 114 திருமணமான புதிதில் புனிதப் போருக்குச் செல்வது.

இது குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித் துள்ளார்கள்.

பாடம் : 115 (மனைவியுடன்) வீடு கூடிய பின்பு புனிதப் போருக்குச் செல்ல முனைதல்.

இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 116 (எதிரிகளின் படையெடுப்புப் பற்றி மக்கள்) பீதிக்குள்ளாகும் போது (அவர்களை அமைதிப்படுத்தவும் அவர்களுக்குப் பாதுகாப்புத் தரவும்) தலைவர் விரைந்து செல்லுதல்.

2968. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விபரமறிந்து வரப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், ‘(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம்’ என்று கூறினார்கள்.
Book : 56