🔗

புகாரி: 2977

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي»

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا


பாடம்: 122

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாத காலப் பயணத் தொலைவுக்கு(ள் இருக்கும் நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் என்னைக் குறித்த) அச்ச உணர்வை விதைத்து அல்லாஹ் எனக்கு உதவி புரிந்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: (சத்தியத்தை) நிராகரித்தவர்களின் உள்ளங்களில் விரைவில் நாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், (இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும்) எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் தரவில்லையோ அவற்றை அவனுடன் அவர்கள் இணையாக்கி விட்டார்கள். (3:151)

ஜாபிர் (ரலி) அவர்கள் (இதுபற்றி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

2977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது.

(ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, “நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.

அத்தியாயம்: 56