🔗

புகாரி: 2979

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صَنَعْتُ سُفْرَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ أَبِي بَكْرٍ، حِينَ أَرَادَ أَنْ يُهَاجِرَ إِلَى المَدِينَةِ، قَالَتْ: فَلَمْ نَجِدْ لِسُفْرَتِهِ، وَلاَ لِسِقَائِهِ مَا نَرْبِطُهُمَا بِهِ، فَقُلْتُ لِأَبِي بَكْرٍ: «وَاللَّهِ مَا أَجِدُ شَيْئًا أَرْبِطُ بِهِ إِلَّا نِطَاقِي»، قَالَ: فَشُقِّيهِ بِاثْنَيْنِ، فَارْبِطِيهِ: بِوَاحِدٍ السِّقَاءَ، وَبِالْآخَرِ السُّفْرَةَ، «فَفَعَلْتُ، فَلِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقَيْنِ»


பாடம் : 123 புனிதப் போர் புரியச் செல்பவருக்குப் பயண உணவை எடுத்துச் செல்லுதல்.

அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் ஹஜ்ஜுக்காக (உணவு போன்ற) பயணச் சாதனங்களைச் கொண்டு செல்லுங்கள். எனினும், (அத்தகைய) பயணச் சாதனங்களில் மிக மேலானது இறை(யச்ச) உணர்வுதான். (2:197)

2979. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முனைந்தபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எனவே, நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை’ என்று கூறினேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் (தண்ணீருக்கான) தோல்பையையும் மற்றொன்றினால் பயண உணர்வையும் கட்டு’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால் தான் எனக்கு ‘இரட்டைக் கச்சுக்காரர்’ என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டது.
Book : 56