🔗

புகாரி: 2990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُسَافَرَ بِالقُرْآنِ إِلَى أَرْضِ العَدُوِّ


பாடம் : 129 எதிரியின் நாட்டிற்கு திருக்குர்ஆன் பிரதிகளுடன் பிரயாணம் செய்வது விரும்பத் தக்கதல்ல.

இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்படித் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இப்னு உமர் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பு வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களும் அவர் களுடைய தோழர்களும் திருக்குர்ஆனை அறிந்திருக்கும் நிலையில் எதிரியின் நாட்டில் பிரயாணம் செய்துள்ளனர்.

2990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுடன் (திருக்குர்ஆனின் பிரதியுடன்) எதிரியின் நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள்.
Book : 56