🔗

புகாரி: 3005

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي بَعْضِ أَسْفَارِهِ، قَالَ عَبْدُ اللَّهِ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: وَالنَّاسُ فِي مَبِيتِهِمْ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَسُولًا أَنْ: «لاَ يَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ، أَوْ قِلاَدَةٌ إِلَّا قُطِعَتْ»


பாடம்: 139

ஒட்டகத்தின் கழுத்தில் மணி போன்றவற்றைத் தொங்க விடுவது.

3005. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தூதுவர் ஒருவரை அனுப்பி, “எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) வில்லின் நாண் மூலம் உருவாக்கப்பட்ட கயிற்று மாலையோ, அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்’ என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபஷீர் அல்அன்ஸாரீ  (ரலி)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள், “அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்” என்று அபூபஷீர் (ரலி) கூறினார் என எண்ணுகிறேன்’ என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம்: 56