«هُمْ مِنْهُمْ»، وَلَمْ يَقُلْ كَمَا قَالَ عَمْرٌو «هُمْ مِنْ آبَائِهِمْ»
3013. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(எதிரிகளுடைய) குழந்தைகள் தொடர்பாக ஸஅப் இப்னு ஜஸ்ஸமா(ரலி), அவர்கள், ‘அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்’ என்று எமக்கு ஹதீஸ் அறிவித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு தீனார்(ரஹ்) ஸுஹ்ரீ(ரஹ்) வாயிலாக, ‘அக்குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைச் சேர்ந்தவர்களே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்து வந்தார்கள்.
ஆனால், ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, ‘அந்தக் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே’ என்றே கூறினார்கள்.
இதை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) தெரிவிக்கிறார்கள்.
Book :56