🔗

புகாரி: 3038

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى اليَمَنِ قَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا»


பாடம் : 164 போரின் போது சச்சரவு செய்து கொள்வதும், கருத்து வேறுபாடு கொண்டு தகராறு செய்து கொள்வதும் வெறுக்கத் தக்கது என்பதும், தன் தலைவருக்கு மாறு செய்பவரின் தண்டனையும்.

அல்லாஹ் கூறுகிறான்: ஒருவரோடொருவர் (பூசல் கொண்டு) சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். (அதனால்) நீங்கள் அச்சமும் பலவீனமும் கொண்டு விடுவீர்கள். உங்கள் வலிமை (பறி) போய் விடும். (8:46)

இங்கே வலிமை என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கதாதா (ரஹ்) கூறுகிறார்கள்.

3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், ‘நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்’ என்று (அறிவுரை) கூறினார்கள்.
Book : 56