🔗

புகாரி: 3040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 165 இரவு நேரத்தில் (படையினரும் மக்களும் எதிரிப் படை வருவதாகக் கேள்விப்பட்டு) பீதிக்குள்ளானால்…

3040. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்) குணமுடையவர்களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள். (விஷயம் என்ன என்றறிய வெளியே வந்தார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டபோது, ‘பயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்’ என்று (மக்களைப் பார்த்து) நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்’ என்றார்கள்.
Book : 56