🔗

புகாரி: 3072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ الحَسَنَ بْنَ عَلِيٍّ، أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالفَارِسِيَّةِ: «كِخْ كِخْ، أَمَا تَعْرِفُ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»


3072. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஹஸன் இப்னு அலீ(ரலி) (சிறுவராயிருந்த போது) தருமப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், ‘ம்ஹ் கிஹ்’ – சீச்சி!’ (என்று சொல்லிவிட்டு) ‘நாம் தருமப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள்.
Book :56