🔗

புகாரி: 3082

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ: ابْنُ الزُّبَيْرِ لِابْنِ جَعْفَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، أَتَذْكُرُ إِذْ تَلَقَّيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَنْتَ، وَابْنُ عَبَّاسٍ قَالَ: «نَعَمْ فَحَمَلَنَا وَتَرَكَكَ»


பாடம் : 196 அறப்போர் வீரர்களை வரவேற்பது.

3082. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், ‘ஆம், நபி(ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56