🔗

புகாரி: 309

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ مَعَهُ بَعْضُ نِسَائِهِ وَهِيَ مُسْتَحَاضَةٌ تَرَى الدَّمَ»، فَرُبَّمَا وَضَعَتِ الطَّسْتَ تَحْتَهَا مِنَ الدَّمِ، وَزَعَمَ أَنَّ عَائِشَةَ رَأَتْ مَاءَ العُصْفُرِ، فَقَالَتْ: كَأَنَّ هَذَا شَيْءٌ كَانَتْ فُلاَنَةُ تَجِدُهُ


பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உள்ள பெண் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது. 

309. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘மஞ்சள் நிற நீரைப் பார்த்ததாகவும் ‘இது இன்னவளுக்கு ஏற்படுகிற ஒன்றைப் போன்றே’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்’ என்றும் இக்ரிமா கூறினார்.
Book : 6