«كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخَلاَتِ، حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ، وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ»
பாடம் : 12 பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் நிலங்களை நபி (ஸல்) அவர்கள் எப்படிப் பங்கிட்டார்கள் என்பதும் அவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தம் அவசரத் தேவைகளுக்காகக் கொடுத்ததும்.
3128. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரை (இலவசமாகப்) பயன்படுத்திக் கொள்ளும் படி தம்) பேரீச்ச மரங்களை நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் கொடுத்து வைத்திருந்தார்கள். அதன் (பனூ குறைழாவையும் பனூ நளீரையும் வெற்றி கொண்ட) பிறகு அவற்றை அவர்களிடமே நபி(ஸல்) அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
Book : 57