🔗

புகாரி: 3178

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَرْبَعُ خِلاَلٍ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا: مَنْ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا


பாடம் : 17 ஒப்பந்தம் செய்து கொண்ட பின்பு துரோகம் செய்தவனின் பாவம்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) எவர் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பிறகு ஒவ்வொரு முறையும் தங்கள் ஒப்பந்தத்தைக் கொஞ்சமும் இறையச்சமின்றி முறிக்கின்றார்களோ அவர்கள் தான் (மிகக் கெட்டவர்கள்). (8:56)

3178. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை.

எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டு விடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 58