🔗

புகாரி: 3186 & 3187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، قَالَ أَحَدُهُمَا: يُنْصَبُ، وَقَالَ الآخَرُ: يُرَى يَوْمَ القِيَامَةِ، يُعْرَفُ بِهِ


பாடம் : 22 நல்லவன், கெட்டவன் யாருக்கும் மோசடி செய்பவன் பாவியாவான்.

3186 & 3187. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘நடப்படுகிற கொடி ஒன்று உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்.

மற்றொருவர், ‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்.
Book : 58