🔗

புகாரி: 3235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَأَيْنَ قَوْلُهُ {ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى} [النجم: 9] قَالَتْ: «ذَاكَ جِبْرِيلُ كَانَ يَأْتِيهِ فِي صُورَةِ  الرَّجُلِ، وَإِنَّهُ أَتَاهُ هَذِهِ المَرَّةَ فِي صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ فَسَدَّ الأُفُقَ»


3235. மஸ்ரூக்(ரலி) அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அப்படியென்றால், ‘பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது’ என்னும் (திருக்குர்ஆன் 53:8,9) இறைவசனம் எங்கே?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல்(அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள்; இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். எனவேதான் அவர் அடிவானத்தையே அடைத்தார்’ என்று பதிலளித்தார்கள்.
Book :59