«إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ»
3237. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து ஷுஃபா, அபூஹம்ஸா, இப்னு தாவூத், அபூமுஆவியா ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
அத்தியாயம்: 59