«فِي الجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، فِيهَا بَابٌ يُسَمَّى الرَّيَّانَ، لاَ يَدْخُلُهُ إِلَّا الصَّائِمُونَ»
பாடம் : 9 சொர்க்கத்தின் வாசல்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் இரண்டு ஜோடி(பொருள்)களைச் செலவழித்தவர் சொர்க்கத்தின் வாசலிலிருந்து அழைக்கப்படுவார்.52 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.53
3257. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Book : 59