🔗

புகாரி: 3258

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَالَ: «أَبْرِدْ» ثُمَّ قَالَ: «أَبْرِدْ» حَتَّى فَاءَ الفَيْءُ، يَعْنِي لِلتُّلُولِ ثُمَّ قَالَ: «أَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும், அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்.

பார்க்க இறை வசனங்கள்: 1) 78:25 2) 69:36 3)17:68 4)14:16 5)14:17 6)14:97 7)54:71 8)54:73 9)54:37 10)54:23 11)54:67 12)11:106 13)19:59 14)19:86 15)40:72 16)40:55 17) 40:35 18)3:181 19) 55:19. 

3258. அபூ தர்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (முஅத்தின் லுஹர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்ட போது), ‘வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம்’ என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘வெப்பம் தணியட்டும்’ என்று – சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும் வரை – கூறினார்கள். பிறகு, ‘தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது’ என்றார்கள்.
Book : 59