🔗

புகாரி: 3288

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

المَلاَئِكَةُ تَتَحَدَّثُ فِي العَنَانِ – وَالعَنَانُ: الغَمَامُ -، بِالأَمْرِ يَكُونُ فِي الأَرْضِ، فَتَسْمَعُ الشَّيَاطِينُ الكَلِمَةَ، فَتَقُرُّهَا فِي أُذُنِ الكَاهِنِ كَمَا تُقَرُّ القَارُورَةُ، فَيَزِيدُونَ مَعَهَا مِائَةَ كَذِبَةٍ


3288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக் கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன.

பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும் போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தன் வாயை வைத்து (தாம் ஒட்டுக் கேட்டவற்றை இரகசியமாகக்) கூறி விடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்து கொண்டு) அதனுடன் நூறு பொய்களை (புனைந்து) சேர்த்து விடுகிறார்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59