خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الحَرَمِ: الفَأْرَةُ، وَالعَقْرَبُ، وَالحُدَيَّا، وَالغُرَابُ، وَالكَلْبُ العَقُورُ
பாடம் : 16
உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்.ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது என்னும் நபிமொழியும்,
ஐந்து பிராணிகள் தீங்கிழைக்கக் கூடியவை. அவற்றை ஹரமிலும் கொல்லலாம் என்னும் நபிமொழியும்.
3314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (பிராணிகள்) எத்தகையவையெனில் அவற்றை ‘ஹரம்’ எனும் பனித எல்லைக்குள் கொன்றாலும் குற்றம் ஏதுமில்லை. எலி, தேள், பருந்து, காக்கை, வெறி, நாய் ஆகியன தாம் அவை. என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59