🔗

புகாரி: 3360

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمَّا نَزَلَتْ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ؟

قَالَ: ” لَيْسَ كَمَا تَقُولُونَ {لَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} [الأنعام: 82] بِشِرْكٍ، أَوَلَمْ تَسْمَعُوا إِلَى قَوْلِ لُقْمَانَ لِابْنِهِ يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ


3360. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

‘நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு மட்டுமே அபயமுண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்’ என்றும் (திருக்குர்ஆன் 06:82ம்) இறைவசனம் அருளப்பட்டபோது,

நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தானிருக்கிறார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. ‘தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13-வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று பதிலளித்தார்கள்.
Book :60