🔗

புகாரி: 3367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا»


3367. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும் போது) உஹுது மலை தென்பட்டது. உடனே,’இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாம் இதை நேசிக்கிறோம்.

இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகர் புனிதமானது என்று அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்’ என்று கூறினார்கள்.
Book :60