🔗

புகாரி: 3382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمُ السَّلَامُ


பாடம் : 18

அல்லாஹ் கூறுகிறான்:

(யூதர்களே!) யஅகூபை இறப்பு நெருங்கிய போது, நீங்கள் அங்கிருந்தீர்களா? அப்போது அவர் தம் மைந்தர்களிடம், எனக்குப் பின்னர் நீங்கள் எதை வணங்குவீர்கள்? என வினவினார்.

(அதற்கு) அவர்கள் உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். மேலும் அவனுக்கே அடிபணிவோம்என்று கூறினார்கள். (2:133) 56

3382. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 60