«إِنَّمَا سُمِّيَ الخَضِرَ أَنَّهُ جَلَسَ عَلَى فَرْوَةٍ بَيْضَاءَ، فَإِذَا هِيَ تَهْتَزُّ مِنْ خَلْفِهِ خَضْرَاءَ»
3402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
களிர்(அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே, அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர்பெற்று) அசையலாயிற்று. எனவேதான் அவர்களுக்கு ‘களிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த நபிமொழி முழுவதுமாக சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60