🔗

புகாரி: 3460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَجَمَّلُوهَا، فَبَاعُوهَا»


3460. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) ‘அல்லாஹ் இன்னாரை அழிப்பானாக’ நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் சாபம் யூதர்களின் மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள்’ என்று கூறினார்கள் என்பதை அவர் அறியமாட்டாரா?’ என்று உமர்(ரலி) கூற கேட்டேன்.

இதையே நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர்(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :60