🔗

புகாரி: 3572

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ، وَهُوَ بِالزَّوْرَاءِ، فَوَضَعَ يَدَهُ فِي الإِنَاءِ، «فَجَعَلَ المَاءُ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، فَتَوَضَّأَ القَوْمُ» قَالَ قَتَادَةُ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ كُنْتُمْ؟ قَالَ: ثَلاَثَ مِائَةٍ، أَوْ زُهَاءَ ثَلاَثِ مِائَةٍ


3572. அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள், (மதீனாவிலுள்ள) ‘ஸவ்ரா’ என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் (ஊற்று போல்) பொங்கி வரலாயிற்று. மக்கள் அனைவரும் (அந்தத் தண்ணீரில்) உளூச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் கதாதா (ரஹ்) கூறினார்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முன்னூறு பேர்’ என்றோ, ‘முன்னூறு பேர் அளவிற்கு’ என்றோ கூறினார்கள்.
Book :61