🔗

புகாரி: 3600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ لِي: إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ، وَتَتَّخِذُهَا، فَأَصْلِحْهَا وَأَصْلِحْ رُعَامَهَا، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، تَكُونُ الغَنَمُ فِيهِ خَيْرَ مَالِ المُسْلِمِ، يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ، أَوْ سَعَفَ الجِبَالِ فِي مَوَاقِعِ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ»


3600. அப்துல்லாஹ் இப்னு அபீ ஸஅஸஆ (ரஹ்) அறிவித்தார்.

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) என்னிடம், ‘நான் உங்களை ஆடுகளை விரும்பக் கூடியவராகவும் அதை வைத்துக் கொண்டு பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். எனவே, அவற்றைச் சரிவரப் பராமரித்துச் சீராக வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மேய்ப்பவர்களையும் சரிவரப் பராமரியுங்கள்.

ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக ஆடுகள் தான் இருக்கும். குழப்பங்கள் விளையும் நேரங்களில் அவற்றிலிருந்து தம் மார்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள விரண்டோடியபடி அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அவன் மழைபொழியும் இடங்களில் ஒன்றான மலையுச்சிக்குச் சென்றுவிடுவான்’ என்று சொன்னதை கேட்டேன்’ என்று கூறினார்கள்.
Book :61