🔗

புகாரி: 3634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ، فَجَعَلَ يُحَدِّثُ ثُمَّ قَامَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمِّ سَلَمَةَ: «مَنْ هَذَا؟» أَوْ كَمَا قَالَ، قَالَ: قَالَتْ: هَذَا دِحْيَةُ، قَالَتْ أُمُّ سَلَمَةَ: ايْمُ اللَّهِ مَا حَسِبْتُهُ إِلَّا إِيَّاهُ، حَتَّى سَمِعْتُ خُطْبَةَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْبِرُ جِبْرِيلَ، أَوْ كَمَا قَالَ،

قَالَ: فَقُلْتُ لِأَبِي عُثْمَانَ: مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ قَالَ: مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ


3634. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்களும் அங்கிருந்தார்கள். (வந்தவர்) பேசத் தொடங்கி, பின்னர் எழுந்து சென்றுவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், “இவர் யார்?” என்று கேட்டார்கள் (அல்லது அது போன்றதொரு வார்த்தையைக் கூறினார்கள்). அதற்கு அவர், “இவர் திஹ்யா” என்று பதிலளித்தார்கள்.


பிறகு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் (வந்தவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று அறிவிக்கும் வரை, அவரைத் திஹ்யா என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.


(அறிவிப்பாளர் கூறுகிறார்:) நான் அபூஉஸ்மானிடம், “இதை யாரிடமிருந்து நீங்கள் கேட்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 61