أَنَّ فَاطِمَةَ، عَلَيْهَا السَّلاَمُ، أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ، وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (-அவர்கள் மீது சாந்தி நிலவட்டும்-) அவர்களின் சிறப்பும்.84 நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார் என்று சொன்னார்கள்.85
3711. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ‘பய்உ’ செல்வத்திலிருந்து தமக்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்து வரவேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா ஆளனுப்பினார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாகவிட்டுச் சென்ற நிலத்தையும் ‘ஃபதக்’ பிரதேசத்திலிருந்து நிலத்தையும் கைபரில் கிடைத்த ‘குமுஸ்’ நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார்.
Book : 62