🔗

புகாரி: 3746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى المِنْبَرِ وَالحَسَنُ إِلَى جَنْبِهِ، يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً، وَيَقُولُ: «ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ المُسْلِمِينَ»


பாடம்-முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.125

பாடம் : 22 ஹஸன் மற்றும் ஹுஸைன்- ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகியோரின் சிறப்புகள்.126

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக் கொண் டார்கள் என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.127

3746. அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி (ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறு முறை ஹஸன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, ‘இந்த என்னுடைய (மகளின்) மகன் மக்களின் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான்’ என்று சொல்ல கேட்டேன்.
Book : 62