🔗

புகாரி: 3748

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

أُتِيَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ بِرَأْسِ الحُسَيْنِ عَلَيْهِ السَّلاَمُ، فَجُعِلَ فِي طَسْتٍ، فَجَعَلَ يَنْكُتُ، وَقَالَ فِي حُسْنِهِ شَيْئًا،

فَقَالَ أَنَسٌ: «كَانَ أَشْبَهَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ مَخْضُوبًا بِالوَسْمَةِ»


3748. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி-அவருக்கு சாந்தி உண்டாகட்டும்!) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட பின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டு வரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுஸைன் (ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.


மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தாரிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் தான், தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகம் ஒப்பானவர்களாய் இருந்தார்கள். ‘வஸ்மா’ எனும் ஒரு வகை மூலிகையால் தம் (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டிருந்தார்கள்.

அத்தியாயம்: 62