🔗

புகாரி: 3795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَةِ، فَأَصْلِحِ الأَنْصَارَ، وَالمُهَاجِرَةَ» وَعَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، وَقَالَ: «فَاغْفِرْ لِلْأَنْصَارِ»


பாடம் : 9 நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளின் நிலையையும் முஹாஜிர்களின் நிலையையும் செம்மைப்படுத்துஎன்று பிரார்த்தித்தது.
3795. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘அன்சாரிகளுக்கு(ம் முஹாஜிர்களுக்கும்) நீ மன்னிப்பு அளிப்பாயாக’ என்று பாடியபடி கூறினார்கள் என உள்ளது.
Book : 63