🔗

புகாரி: 3796

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الخَنْدَقِ تَقُولُ:
نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا … عَلَى الجِهَادِ مَا حَيِينَا أَبَدَا
فَأَجَابَهُمْ
«اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ … فَأَكْرِمِ الأَنْصَارَ وَالمُهَاجِرَهْ»


3796. அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார்.
அகழ்ப்போர் நாளில் அன்சாரிகள், ‘நாங்கள் (எத்தயைவர்கள் எனில்), ‘நாங்கள் உயிரோடியிருக்கும் காலம் வரை அறப்போர் புரிவோம்’ என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்’ என்று (பாடியபடிக்) கூறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!’ என்று (பாடிய படியே) கூறினார்கள்.
Book :63