🔗

புகாரி: 3838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ المُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ مِنْ جَمْعٍ، حَتَّى تَشْرُقَ الشَّمْسُ عَلَى ثَبِيرٍ، فَخَالَفَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ»


3838. உமர்(ரலி) அறிவித்தார்.
(ஹஜ்ஜின் போது) ‘ஸபீர்’ மலை மீது சூரியன் ஒளிராத வரை, இணைவைப்பவர்கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப் புறப்பட்டார்கள்.
Book :63