🔗

புகாரி: 3896

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تُوُفِّيَتْ خَدِيجَةُ قَبْلَ مَخْرَجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَدِينَةِ بِثَلاَثِ سِنِينَ، فَلَبِثَ سَنَتَيْنِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، وَنَكَحَ عَائِشَةَ وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ، ثُمَّ بَنَى بِهَا وَهِيَ بِنْتُ تِسْعِ سِنِينَ»


3896. உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) இறப்பெய்திவிட்டார்கள். (அதன்பின்னர்) நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள்… அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்… (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா (ரலி) ஆறுவயதுடையவர்களாயிருக்கும்போது அவர்களை மணந்தார்கள்.

பிறகு ஆயிஷா (ரலி) ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள்.
Book :63