فَقَالَ أَبُو بَكْرٍ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا المَالِ» وَاللَّهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي
4036. அப்போது அபூ பக்ர் (ரலி), ‘(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக ஆகமாட்டார்கள். நாங்கள்விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தினர் இச்செல்வத்திலிருந்து சிறிதளவைத்தான் உண்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு உவப்பானவர்கள்’ என்று கூறினார்கள்.
Book :64