🔗

புகாரி: 4127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعْتُ جَابِرًا، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ذَاتِ الرِّقَاعِ مِنْ نَخْلٍ، فَلَقِيَ جَمْعًا مِنْ غَطَفَانَ، فَلَمْ يَكُنْ قِتَالٌ، وَأَخَافَ النَّاسُ بَعْضُهُمْ بَعْضًا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيِ الخَوْفِ ” وَقَالَ يَزِيدُ: عَنْ سَلَمَةَ، غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ القَرَدِ


4127. ஜாபிர்(ரலி) கூறினார்
(நஜ்த் பகுதி ‘ஃகத்ஃபான்’ குலத்தார் வசித்து வந்த) ‘நக்ல்’ என்னுமிடத்திற்கு ‘தாத்துர் ரிகாஉ’ போருக்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது ‘ஃகத்ஃபான்’ குலத்தாரின் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார்கள். மக்களில் சிலர் சிலரைக் கண்டு அஞ்சினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களுடன்) அச்ச நேரத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
ஸலமா(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்களுடன் நான் ‘அல்காத்’ போரில் கலந்து கொண்டேன்.
Book :64