🔗

புகாரி: 4392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ، فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ»


பாடம் : 45 ஷாம் நாட்டில் நடைபெற்ற மூத்தா போர்.304
4392. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
துஃபைல் இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தவ்ஸ் குலத்தார் அழிந்துவிட்டார்கள்; (இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்) மாறு செய்துவிட்டார்கள்; (இஸ்லாத்தை) ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, தாங்கள் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! ‘தவ்ஸ்’ குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டு வருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 64