أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَاضَتْ فِي حَجَّةِ الوَدَاعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَابِسَتُنَا هِيَ» فَقُلْتُ: إِنَّهَا قَدْ أَفَاضَتْ يَا رَسُولَ اللَّهِ وَطَافَتْ بِالْبَيْتِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلْتَنْفِرْ»
4401. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு ‘ஹஜ்ஜத்துல் வதா’வின்போது மாதவிடாய் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா?’ என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், ‘அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்’ என்று கூற, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் பரவாயில்லை. அவர் புறப்படலாம்’ என்று கூறினார்கள்.
Book :64