🔗

புகாரி: 4426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَذْكُرُ أَنِّي «خَرَجْتُ مَعَ الغِلْمَانِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَقَالَ سُفْيَانُ مَرَّةً : «مَعَ الصِّبْيَانِ»


4426. ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக ‘வதா’ மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவு கூர்கிறேன்.

அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறினார்:

(‘ஃகில்மான்’ (சிறுவர்கள்) என்பதற்கு பதிலாக) ‘ஸிப்யான் (சிறுவர்கள்) என்று ஸாயிப் பின் யஸீத் (ரலி) மற்றொரு முறை (இதை அறிவிக்கும்போது) கூறினார்கள்.

அத்தியாயம்: 64