🔗

புகாரி: 443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ – قَالَ مِسْعَرٌ: أُرَاهُ قَالَ: ضُحًى – فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي


பாடம் : 59 பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம் என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

443. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். ‘இரண்டு ரக்அத் தொழுவீராக!’ என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்.

(இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளரான) மிஸ்அர் ‘முற்பகல் நேரத்தில் வந்தேன்’ என்று ஜாபிர்(ரலி) கூறினார் எனக் குறிப்பிடுகிறார்.
Book : 8