«لَيْسَ المِسْكِينُ الَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، وَلاَ اللُّقْمَةُ وَلاَ اللُّقْمَتَانِ، إِنَّمَا المِسْكِينُ الَّذِي يَتَعَفَّفُ، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ» يَعْنِي قَوْلَهُ: {لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا} [البقرة: 273]
பாடம் : 48 (பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் தடுத்துவைக்கப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் நடமாட இயலாதவர்கள். அவர்கள் இரவாததால், அறியாதோர் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமைத்) தோற்றத்தைக் கொண்டு அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத் தொடர்). (தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான் என்று சொல்வதற்கு அல்ஹஃப அலய்ய என்று (அரபுகள்) கூறுவர். இச் சொல்லின் வேர்ச் சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் இல்ஹாஃப் (வற்புறுத்தல்) என இடம் பெற்றுள்ளது.
4539. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரிச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், ‘அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்’ எனும் (இந்த 02:273 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 65