«لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ، قَرَأَهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ فِي المَسْجِدِ، وَحَرَّمَ التِّجَارَةَ فِي الخَمْرِ»
பாடம் : 51 (வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விட மும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும்2:279ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃபஃதனூ எனும் சொல்லுக்கு அறிந்து கொள்ளுங்கள்என்று பொருள்.79
4542. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) அருளப்பெற்றபோது அவற்றை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.
Book : 65