أَمَّا بَعْدُ، أَيُّهَا النَّاسُ إِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الخَمْرِ، وَهْيَ مِنْ خَمْسَةٍ مِنْ: العِنَبِ وَالتَّمْرِ وَالعَسَلِ وَالحِنْطَةِ وَالشَّعِيرِ، وَالخَمْرُ مَا خَامَرَ العَقْلَ
4619. இப்னு உமர்(ரலி) கூறினார்.
உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் உரைமேடையிலிருந்தபடி, ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத்தடை(ச் சட்டம்) இறங்கிவிட்டது. திராட்சை, பேரிச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்’ என்று கூறினார்கள்.
Book :65