🔗

புகாரி: 4659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ القِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ»


பாடம் : 6 எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் நற்செய்தியினை (நபியே!) நீர் அறிவிப்பீராக எனும் (9:34ஆவது) வசனத் தொடர்.

4659. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களின் கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65