«إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ: {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ} [هود: 102]
பாடம் : 5 மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித் தானிருக்கும். திண்ணமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானது மாகும் எனும் (11:102ஆவது) இறைவசனம். (11:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர் ரிஃப்த் எனும் சொல்லுக்கு உதவி என்று பொருள். அல் மர்ஃபூத் எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள். (அதன் இறந்த கால வினைச் சொல்லான) ரஃபத்துஹு எனும் சொல்லுக்கு அவனுக்கு நான் உதவிபுரிந்தேன் என்று பொருள். (11:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தர்கனூ எனும் சொல்லுக்குச் சாய்ந்து விடுதல் என்று பொருள். (11:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப லவ் லா கான எனும் சொற்றொடருக்கு இருந்திருக்க வேண்டாமா என்று பொருள். உத்ரிஃபூ (ஆசாபாசங்களைப் பின்பற்றி) அழிந்து போயினர் என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (11:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃபீர் எனும் சொல்லுக்குக் கடுமையான (கூச்சல்) என்று பொருள். ஷஹீக் எனும் சொல்லுக்குப் பலவீனமான குரல் என்று பொருள்.
4686. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அக்கிரமக்காரனுக்குவிட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்’ என்று கூறிவிட்டு, பிறகு, ‘மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
Book : 65